sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்

/

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்


ADDED : டிச 04, 2024 08:35 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடர் கன மழையால் மீனவர்கள் நான்கு நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. கடந்த 1ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதி மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 18 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கு எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக நேற்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 18 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

விசைப்படகு மற்றும் படகில் உள்ள ஜி.பி.எஸ்.,கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் மற்றும் விசைப்படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us