sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது 

 வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது 

 வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது 


ADDED : ஏப் 10, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 06:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து, ரூ. 1.24 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட மூலக்குளம் சந்திப்பில் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, சந்தேகப்படும் படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 69 ஆயிரம் பதுக்கி வைத்திருந்தார்.

தொடர்ந்து, அவரை ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மூலக்குளத்தை சேர்ந்த ராஜேஷ், 40; என்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல், மங்கலம் தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த நடராஜன், 60 என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us