ADDED : ஆக 20, 2025 07:28 AM
புதுச்சேரி : பாகூர் அடுத்த மணமேட்டை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அவர், பல்வேறு தவணைகளாக மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 2 லட்சத்து 61 ஆயிரத்து 678 முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், காலாப்பட்டை சேர்ந்த பெண் 64 ஆயிரத்து 300, குயவர்பாளையத்தை சேர்ந்த நபர் 36 ஆயிரத்து 690, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 14 ஆயிரம், புதுசாரத்தை சேர்ந்த நபர் 40 ஆயிரம், ஏனாமை சேர்ந்த நபர் 69 ஆயிரத்து 177, சண்முகாபுரத்தை சேர்ந்த பெண் 10 ஆயிரம், மற்றொரு பெண் 15 ஆயிரம் என, 8 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 10 ஆயிரத்து 815 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.