ADDED : ஜன 30, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிேஷக 3ம் ஆண்டு விழா நடந்தது.
புதுச்சேரி, சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்ர மணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக 3ம் ஆண்டு விழாவையொட்டி, தையல்நாயகி அம்மாள், அபய ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் உற்சவமூர்த்திக ளுக்கு அபிேஷகம் நடந்தது .
அதனை தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் உபய தாரர்கள் செய்திருந்தனர்.

