ADDED : ஜன 15, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்,: ஏரிப்பாக்கம் புதுக்காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 32, கடந்த 11ம் தேதி இரவு, ராஜேஸ்வரி, அண்ணன் சங்கர், தாய் பாப்பாத்தி, உறவினர்கள் மஞ்சுளா, திரிஷா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, கிருஷ்ணராஜ், சுந்தரி, ஆறுமுகம், தாட்சாயணி ஆகியோர் முன் விரோதத்தில் ராஜேஸ்வரி வீட்டினுள் நுழைந்து ஆபாசமாக பேசி, தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் சங்கர் பலத்த காயமடைந்தார்.
புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

