/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜனநாயகம் காக்க விழிப்புணர்வு கருத்தரங்கு: இந்திய கம்யூ., முடிவு
/
ஜனநாயகம் காக்க விழிப்புணர்வு கருத்தரங்கு: இந்திய கம்யூ., முடிவு
ஜனநாயகம் காக்க விழிப்புணர்வு கருத்தரங்கு: இந்திய கம்யூ., முடிவு
ஜனநாயகம் காக்க விழிப்புணர்வு கருத்தரங்கு: இந்திய கம்யூ., முடிவு
ADDED : ஜன 11, 2026 05:10 AM
புதுச்சேரி: இந்திய கம்யூ., கட்சியின் காமராஜர் நகர் தொகுதிக் குழு கூட்டம், மாதவராமன் தலைமையில் சித்தன்குடி இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் நடந்தது.
தொகுதி செயலாளர் துரை செல்வம் நடைபெற்ற வேலைகள், கட்சி உறுப்பினர் பதிவு, எதிர் காலக்கடமைகள் குறித்து பேசினார்.
மாநில செயலாளர் சலீம் மாநில அரசியல் நிலை குறித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடினார். இம்மாதம் இறுதிக்குள் ஜனநாயகம் காப்போம், பணநாயகம் விரட்டுவோம், காமராஜர் நகர் விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது என்று முடிவுச் செய்யப்பட்டது.
கூட்டத்தில், கிளை செயலாளர்கள் சரவணன், சந்திரகுமார், ராஜம்மாள், சண்முகம், தொகுதிக்குழு உறுப்பினர்கள் சரவணன், மோகன்தாஸ், பிரகாஷ், சூரி, வேலன் கலந்து கொண்டனர்.

