/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை பந்த்: 'இண்டியா' கூட்டணி ஆலோசனை
/
புதுச்சேரியில் நாளை பந்த்: 'இண்டியா' கூட்டணி ஆலோசனை
புதுச்சேரியில் நாளை பந்த்: 'இண்டியா' கூட்டணி ஆலோசனை
புதுச்சேரியில் நாளை பந்த்: 'இண்டியா' கூட்டணி ஆலோசனை
ADDED : ஜூலை 08, 2025 06:49 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை நடக்கும் பந்த் போராட்டம் குறித்து, 'இண்டியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில், நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுச்சேரியில் இந்த போராட்டத்தை, பந்த் போராட்டமாக நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. எட்டு இடங்களில் மறியலும் நடக்கிறது.
தொழிற்சங்கங்களின் பந்த் போராட்டம் குறித்த இண்டியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம், முதலியார்பேட்டை கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
காங்., புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூ., மாநில செயலர் சலிம், மா.கம்யூ., மாநில செயலர் ராமச்சந்திரன், வி.சி., முதன்மை செயலர் தேவபொழிலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.