sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாங்காத கடனுக்கு பணம் பிடித்த வங்கி; பெண்ணுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

/

வாங்காத கடனுக்கு பணம் பிடித்த வங்கி; பெண்ணுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

வாங்காத கடனுக்கு பணம் பிடித்த வங்கி; பெண்ணுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

வாங்காத கடனுக்கு பணம் பிடித்த வங்கி; பெண்ணுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

1


ADDED : மார் 03, 2025 06:49 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:49 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வாங்காத கடனுக்கு வங்கியில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டது.

புதுச்சேரி, மூலக்குளத்தைச் சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர், வீட்டு உபயோக பொருட்களை தனியார் ஏஜன்சியில் தவணை முறையில் வாங்க, ராஜேஷ் என்ற முகவரிடம், 2019ல் தனியார் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தார்.

அவருக்கு கடன் கிடைக்கவில்லை. ஆனால், அவர் 58,000 ரூபாய் கடன் பெற்றதாக, அவரது எஸ்.பி.ஐ., கணக்கில் இருந்து, 6,428 ரூபாய் மாதாந்திர தவணை தொகை தொடர்ந்து பிடிக்கப்பட்டது.

போதுமான நிதி இல்லாததால், வங்கியிலிருந்து அவருக்கு, 67,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

விசாரித்த போது, ராஜேஷ் வாயிலாக அறிமுகமான சாரதி என்பவர் கஜலட்சுமி ஆவணங்களை பயன்படுத்தி, போலியாக கையெழுத்திட்டு அந்த கடனை பெற்றது தெரியவந்தது.

கஜலட்சுமி, பெரியகடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதேநேரம், கடனை கட்ட வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் புதுச்சேரி நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் முறையிட்டார்.

அம்மாநில நுகர்வோர் ஆணைய தலைமை உறுப்பினர் சுந்தரவடிவேலு, உறுப்பினர் உமாசங்கரி ஆகியோர் கொண்ட அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us