ADDED : ஆக 28, 2026 04:30 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறந்த ஊழியருக்கான விருதை, முதல்வர் ரங்கசாமி, ஏனாம் வன மேற்பார்வையாளர் டொம்மெட்டி ஸ்ரீனுபாபுவிற்கு வழங்கினார்.
புதுச்சேரியில், நடந்த சுதந்திர தின விழாவின் போது, ஏனாம் வனத்துறையில் பணியாற்றும், வன மேற்பார்வையாளரான (மஸ்துார்) டொம்மெட்டி ஸ்ரீனுபாபு, சிறந்த ஊழியர் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான விருதினை, பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், முன்னிலையில், முதல்வர் ரங்கசாமியிடமிருந்து பெற்று கொண்டார்.
