sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

/

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்


ADDED : மே 20, 2025 01:02 AM

Google News

ADDED : மே 20, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, தனியார் ஹோட்டல்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன் சென்னை சென்றுள்ள நிலையில், நேற்று மாலை 4:20 மணி அளவில், கவர்னர் மாளிகைக்கு இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தகவலின்பேரில் எஸ்.பி.,ரகுநாயகம் தலைமையில் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மோப்ப நாய் டோனி மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது.

நேற்று 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us