UPDATED : செப் 15, 2026 11:13 PM
ADDED : செப் 15, 2026 09:14 PM
புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு நேற்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில், தலைமைச் செயலகம் உள்ளது. புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பேசிய நபர், தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெடிக்கும் என, கூறியுள்ளார்.
இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீணையணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு தகவல் புரளி என்பது உறுதியானது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
