sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டு ஜன்னலை உடைத்து ரூ. 40 லட்சம் நகைகள் திருட்டு

/

வீட்டு ஜன்னலை உடைத்து ரூ. 40 லட்சம் நகைகள் திருட்டு

வீட்டு ஜன்னலை உடைத்து ரூ. 40 லட்சம் நகைகள் திருட்டு

வீட்டு ஜன்னலை உடைத்து ரூ. 40 லட்சம் நகைகள் திருட்டு


ADDED : பிப் 19, 2025 03:49 AM

Google News

ADDED : பிப் 19, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் வீட்டு ஜன்னல் உடைத்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் நகைகள் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், விவேகானந்தா நகர் விரிவாக்கம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன், 67; விழுப்புரத்தில் டயர் ரீரேடிங் கம்பெனி நடத்தி வந்தார். வயது மூப்பு காரணமாக தொழிலை விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இவருடைய ஒரே மகள் ஷாலினியை சென்னையில் திருமணம் செய்து கொடுத்து விட்டு, வீட்டில் ஸ்ரீதரன், அவரது மனைவி சூரியபாலா மட்டும் இருந்து வருகின்றனர்.

கடந்த 16ம் தேதி காலை சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக தம்பதி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 6.30 மணியளவில் எதிர் வீட்டைச் சேர்ந்த ரவிசங்கர், ஸ்ரீதரனை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டு ஜன்னல் உடைத்து மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஸ்ரீதரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் திருடு போனது தெரியவந்தது.

ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us