sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுபானங்களின் விலை உயருகிறது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

/

மதுபானங்களின் விலை உயருகிறது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

மதுபானங்களின் விலை உயருகிறது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

மதுபானங்களின் விலை உயருகிறது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


ADDED : ஜன 11, 2025 06:23 AM

Google News

ADDED : ஜன 11, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரியில் நலத்திட்டங்களுக்கு அதிகரித்து வரும் நிதி சுமை, அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுபான உரிம கட்டணத்தையும், கலால் வரியையும் உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வருவாய் அதிகரிப்பின் ஒரு பகுதியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை கல்வித்துறையுடன் இணைத்தல் உள்ளிட்ட விஷயங்களும் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 13 ஆயிரம் கோடிக்கு மேல் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

எனவே சொந்த வருவாயை அதிகரிக்க முடிவு செய்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் மூன்றாவது வாரத்தில் மாநில திட்ட குழு கூட்டம் கூட உள்ள சூழ்நிலையில் மாநில வருவாயை பொறுத்து, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுத்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us