/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டய ஆசிரியர் தேர்வர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
/
பட்டய ஆசிரியர் தேர்வர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டய ஆசிரியர் தேர்வர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டய ஆசிரியர் தேர்வர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 19, 2024 02:01 AM
புதுச்சேரி: தொடக்க கல்வி பட்டய தேர்வெழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சுகுணா சுகிர்த பாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
கடந்த ஜூன்-ஜூலை தொடக்க கல்வி பட்டய தேர்வெழுதிய முதலாமாண்டு, இரண்டாமாண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை, அவரவர் பயிற்சி கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திலும் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறு கூட்டல் செய்யவும், ஸ்கேன் நகல் பெற விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பெறலாம். அதனை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கொடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்களை 20ம் தேதி காலை 11 மணி முதல் 23ம் தேதி வரை 5 மணி சமர்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தற்போது விடைத்தாள்கள் ஸ்கேன் நகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்-2, மறுமதிப்பீடு விண்ணப்பிக்க இயலும். தற்போது விடைத்தாள் மறுகூட்டல்-1 கோரி விண்ணப்பிக்காத தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் ஸ்கேன் நகல் பெற ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் கட்டணம், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு பாடத்திற்கு 205 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

