/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
/
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
ADDED : மே 02, 2025 04:53 AM
புதுச்சேரி: புதுச்சேரி, வில்லியனுார் ஒதியம்பட்டு ரோட்டைச் சேர்ந்தவர் கிரேஸ் லினி, 29; ஐ.டி கம்பெனி ஊழியர். இவருக்கும், உறவினரான கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த நிகில், 34; என்பவருக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
கேரளாவில் உள்ள ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்த நிகில், திருமணதிற்கு கிரேஸ் லினியின் பெற்றோரிடம் வரதட்சணையாக 30 சவரன் நகை மற்றும் ரூ. 15 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதன்படி, திருமணத்தின் போது, கிரேஸ் லினியின் பெற்றோர் 30 சவரன் நகை, ரூ. 5 லட்சம் பணத்தை வரதட்சணையாக நிகிலிடம் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, திருமணமாகிய சில மாதங்களில் கிரேஸ் லினியிடம், அவரது கணவர் நிகில் மீதமுள்ள ரூ.10 லட்சம் வரதட்சணை பணத்தை, பெற்றோரிடம் வாங்கி தரும்படி கேட்டு கொடுமை படுத்தியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கிரேஸ் லினி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், கிரேஸ் லினி வரதட்சணை கேட்டு, கொடுமைப் படுத்தியதாக கணவர் நிகில் மீது புதுச்சேரி மகளிர் கோர்ட்டில் புகார் அளித்தார். இதையடுத்து, கோர்ட் உத்தரவின் பேரில், வில்லியனுார் மகளிர் போலீசார், கேரளாவை சேர்ந்த நிகில் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.