/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டுக்கறி வாங்கி ரூ. 23 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
/
ஆட்டுக்கறி வாங்கி ரூ. 23 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
ஆட்டுக்கறி வாங்கி ரூ. 23 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
ஆட்டுக்கறி வாங்கி ரூ. 23 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 04, 2025 04:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரியாணி கடைக்கு ஆட்டுக் கறி வாங்கிக்கொண்டு, ரூ.23 லட்சம் மோசடி செய்த குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மூலகுளம், ரங்கா நகரை சேர்ந்தவர் போலாசா, 54; மேட்டுப்பாளையத்தில் 'மாலிக் பாய் மட்டன் சப்ளை' கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு தொடர்பு கொண்ட கொசப்பாளையம், டி.ஆர்.நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் பாலசந்திரன், அவரது மனைவி ரம்யா ஆகியோர், புதுச்சேரியில் பிரியாணி கடை துவங்கியுள்ளதால், ஆட்டுக்கறி வழங்கும்படி கூறியுள்ளனர்.
மேலும், அந்த பிரியாணி கடை பெயரில் விழுப்புரத்திலும் கிளையை துவங்கியுள்ளதாக கூறி அதற்கும் கறி அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கான பணத்தை நிலுவை இல்லாமல் கொடுத்து வந்ததால், அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, போலாசா தொடர்ந்து இரு கடைகளுக்கும் கறிகளை வழங்கி வந்தார். இந்நிலையில், அவர்களுக்கு கறி கொடுத்ததில், ரூ. 23 லட்சம் நிலுவை இருந்தது.
இதையடுத்து, போலாசா நிலுவை தொகையை கேட்டு அவர்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டபோது, சரியாக பதில் அளிக்கவில்லை.
அவர்களின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டபோது, வீட்டில் இருந்த பாலச்சந்திரன், அவரது மனைவி ரம்யா, தந்தை சேதுராமன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
போலாசா அளித்த புகாரின் பேரில் பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

