ADDED : அக் 29, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கிறிஸ்துவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா, நடைபெறுவதை முன்னிட்டு, சுத்தம் செய்யும் பணி நடந்தது.
புதுச்சேரியில் கல்லறை திருவிழா, வரும் 2ம்தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக உப்பளம், நெல்லித்தோப்பில் உள்ள கல்லறை உள்ள இடங்களை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
அதே போல, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, வில்லியனுார் ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டம் சுத்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவர்கள், தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு, பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

