ADDED : மே 29, 2026 05:28 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூன் 1ல் துவங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் சுய கணக்கெடுப்பு கடந்த 17ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த கணக்கெடுப்பில், பொதுமக்கள்தங்கள் குடும்ப விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்து நிறைவு செய்த பின், கிடைக்கும் தகவல்களைகணக்கெடுப்பாளர்கள்வீடுதோறும் வரும் போது வழங்கினால் தகவல்களை எளிதாக பெறமுடியும்.
இந்த கணகெடுப்பு குறித்து விழிப்புணர்வைகலெக்டர் குலோத்துங்கன் நேற்று முன்தினம் துவங்கி வைத்தார். இதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் பங்கேற்றனர். இதுபற்றி சந்தேகம் இருந்தால் பொதுமக்கள் 1855 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை ஊழியர்கள் வரும் 1ம் தேதி வீடு, வீடாக சென்று துவங்க உள்ளனர். இப்பணி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
