sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு

/

பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு

பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு

பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 31, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; தனியார் பள்ளி ஆசிரியையிடம் முகவரி கேட்பது போல், செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்குளம், ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெரால்டு. இவரது மனைவி அஞ்சலின் நிர்மலா மேரி, 58; உப்பளம் தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை 4:00 மணியளவில் தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

மூலக்குளம், டீச்சர்ஸ் காலனியில் உள்ள பாவேந்தர் நகர், 7 வது குறுக்கு தெருவில் வந்தபோது, எதிரே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அஞ்சலின் நிர்மலா மேரியை நிறுத்தி, ஒரு பேப்பரை கொடுத்து அதில் இருந்த முகவரி எங்கே இருக்கிறது என, கேட்டனர்.

அதற்கு, அஞ்சலின் நிர்மலா மேரி பதில் அளித்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி செயினை, பறித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us