/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.123 கோடி நிதி ஒதுக்கி நலத்திட்ட உதவிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
/
மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.123 கோடி நிதி ஒதுக்கி நலத்திட்ட உதவிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.123 கோடி நிதி ஒதுக்கி நலத்திட்ட உதவிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.123 கோடி நிதி ஒதுக்கி நலத்திட்ட உதவிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : டிச 15, 2024 05:36 AM

புதுச்சேரி : கருவடிக்குப்பம், காமராஜர் மணி மண்டபத்தில், மீன்வளத்துறையின் இணையதள செயலி அறிமுகம் மற்றும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் இணையதள செயலியை அறிமுகப்படுத்தி பேசினார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், பாஸ்கர், அரசு செயலர் நெடுஞ்செழியன், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வ சிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
நமது அரசு பல்வேறு நலத்திட்டங்களை மீனவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. நிவாரணம் குறித்து குறை சொல்பவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. இம்மாத இறுதிக்குள் ரேஷன்கடைகளில் இலவச அரிசி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவர்கள் நலனுக்கு ஊட்டச்சத்து உதவித்தொகை, மீன் பிடி தடைக்கால பணம், ஓய்வூதியம், படகுகளை சரி செய்தல் மற்றும் அதற்கான காப்பீட்டு தொகை, டீசல் மானியம், மீனவர் கடன், மீன் பிடி இறங்கு தளம், துறைமுக விரிவாக்கம், கடற்கரை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மீனவர் சமூக மாணவ, மாணவியரின் பள்ளி, கல்லுாரி படிப்பிற்காக, அரசு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதள செயலி மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் மிக எளிதாக மீனவர்களை சென்றடையும்.
மீனவர்களுக்காக, ஆண்டு ஒன்றுக்கு, ரூ.123 கோடி வரை அரசுநிதி ஒதுக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.