sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குப்பைகள் அள்ளும் ஊழியர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை

/

குப்பைகள் அள்ளும் ஊழியர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை

குப்பைகள் அள்ளும் ஊழியர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை

குப்பைகள் அள்ளும் ஊழியர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை


ADDED : நவ 18, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்; புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் குப்பைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண்ணடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு பகுதியில் சில ஊழியர்கள் தேவையில்லாத இடங்களில் குப்பைகளுடன் மண்ணை அள்ளுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், குப்பைகள் அகற்றும் தனியார் நிறுவன மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் அப்பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பணியில் இருந்த ஊழியர்களை அழைத்து, தேவையில்லாத இடங்களில் குப்பைகளை அகற்றக் கூடாது. பொதுமக்கள் யாரேனும், வீடுகள், வணிக நிறுவனங்கள் அல்லாத தனியார் இடத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வலியுறுத்தினால், நிறுவனத்திடம் தெரிவித்து கொம்யூன் அனுமதியுடன் அப்புறப்படுத்த வேண்டும் என, ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பிரச்னைக்குரிய ஊழியர்களை வேறு பகுதிக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தனர். உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us