/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.36 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை
/
ரூ.1.36 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை
ADDED : பிப் 28, 2026 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேர், மோசடி கும்பலிடம் ரூ. 1.36 லட்சம் இழந்தனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த நபர், தனது வங்கி கணக்கு அப்டேட் தொடர்பாக, விவரங்களை யூடியூப் வலைதளத்தில் தேடினார். அப்போது, அதில் வந்த மொபைல் செயலியை உண்மை என நம்பி, பதிவிறக்கம் செய்து, வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டார். அதன் பின், அவரது வங்கி கணக்கில் இ ருந்து ரூ.75 ஆயிரத்து 400 யை மர்ம நபர்கள் திருடினர். இதே போன்று, முத்தியால்பேட்டை நபர் 36 ஆயிரத்து 200 ரூபாய், முருங்கப்பாக்கம் நபர் 14 ஆயிரம், நைனார்மண்டபம் நபர் 5, 396, பாக்குமுடையன்பேட்டை நபர் 5,500 ரூபாய் என 5 பேர் மொத்தம் ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 496யை இழந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

