sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

12 பேரிடம் ரூ.3.18 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

/

12 பேரிடம் ரூ.3.18 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

12 பேரிடம் ரூ.3.18 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

12 பேரிடம் ரூ.3.18 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 27, 2024 11:21 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, நவ. 28-

புதுச்சேரியில் ஒரே நாளில்12 பேரிடம், ரூ. 3.18 லட்சம் ஏமாற்றியமோசடிக்காரர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் இளைஞர் ஒருவரிடம், அவரது கிரெடிட் கார்டிற்கு 90 ஆயிரம் பரிசு விழுந்ததாக கூறி, குறிப்பிட்ட சில தகவல்களை மர்ம நபர்கள் கேட்டனர்.

அதை நம்பி, தகவல்களை அனுப்பிய உடன், அவருடைய அக்கவுண்ட்டில் இருந்து, 9 ஆயிரத்து 999 ரூபாய் எடுக்கப்பட்டது.

ஒரு நபரிடம் 'ஸ்கிராட்ச்' கார்டில் 10 ஆயிரம் பரிசு விழுந்ததாக மர்ம நபர்கள் கூறினர். அதை பெற, 499 செலுத்தி, அவர் ஏமாந்தார். அதேபோல, இணைய வழியில் டாஸ்க் முடித்தால், அதிக பணம் தருவதாக, மோசடிக்காரர்கள்தெரிவித்தனர்.

இதை நம்பி மூன்று பேர் முறையே 59 ஆயிரம், 25 ஆயிரம், 3 ஆயிரத்து500 ரூபாயை பறி கொடுத்தனர். பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு லோன் வாங்கி தருகிறோம் என, மூன்று பேரிடம், 28 ஆயிரம்; 6 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர்கள் ஏமாற்றினர்.

தனியார் வங்கியில் இருந்து அனுப்புவதுபோல, இளைஞர் ஒருவருக்கு மர்ம நபர்கள், ஒரு 'லிங்க்'கை அனுப்பினர். அதில் சில விவரங்களை பதிவிட சொன்னதையடுத்து அவரும் நம்பி அதில் பதிவிட்டார். அதற்கு பிறகு அவருடைய வங்கி கணக்கில் இருந்து 23 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us