sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

/

பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு


ADDED : அக் 08, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொதுப்பணித் துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கருணை அடிப்படையில் வேலை பெற்றோர் தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.

சங்க தலைவர் ஜெயசந்திரன் அறிக்கை:

பொதுப்பணித் துறையில் விதிமுறையின்படி 5 சதவீதம் இடங்கள் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களை நியமனம் செய்ய வேண்டும். 2000ம் ஆண்டு முதல் இதுவரை வாரிசு பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொல்லைப்புற நியமனங்களுக்கு விதிமுறை மீறி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என சகலமும் அளிக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், புதுச்சேரி அரசு, கருணை அடிப்படையில் வேலை கொடுக்க கடந்த 25 ஆண்டுகளாக மறுத்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது, இன்னும் ஒரு மாதத்திற்குள் வாரிசு பணியிடங்கள் நிரப்பப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி வாரிசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதனை இனியும் பொறுத்து கொள்ள முடியாது. எனவே விதிமுறைப்படி வாரிசு பணியிடங்கள் நிரப்பாத பொதுப்பணித் துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us