நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவமதித்ததை கண்டித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுதேசி மில் அருகில் நேற்று காலை 10:00 மணியளவில் நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதன்மை செயலாளர் பொழிலன் தலைமை தாங்கினார். நந்தன், அரிமாத்தமிழன், ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு - புதுச்சேரி அமைப்பு செயலாளர் தலையாரி, பொதினிவளவன், தமிழ்மாறன், முன்னவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.