sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு

/

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.,துவக்கி வைப்பு


ADDED : அக் 07, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,; புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் 'உடன்பிறப்பே வா' பரப்புரையின் கீழ் உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா முத்தியால்பேட்டை தொகுதியில் நேற்று நடந்தது.

விழாவில், ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார்.

காரைக்கால் மாவட்ட செயலாளர் நாஜிம், அவைத்தலைவர் சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தனர்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா. சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் சவுரிராஜன், சக்திவேல், திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், கோபால், முன்னாள் சபாநாயகர் பழநிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை தொகுதிகளில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டது.

வரவேற்பதில் தள்ளு, முள்ளு

நெல்லித்தோப்பு தொகுதி சாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில், எம்.பி.,யை வரவேற்க தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் 2 குழுக்களாக தனித்தனியாக காத்திருந்தனர். முகாம் இடத்திற்கு எம்.பி., வந்தபோது, யார் முதலில் வரவேற்பது அளிப்பது என இரு குழுவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதையடுத்து, போலீசார் இரு குழுவினரை சமாதானப்படுத்தினர். அதன்பின், ஆறுமுகம், கார்த்திகேயன் அடுத்தடுத்து ஜெகத்ரட்சகனுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.








      Dinamalar
      Follow us