/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை போதை வாலிபர் கைது
/
பொது இடத்தில் ரகளை போதை வாலிபர் கைது
ADDED : ஜூன் 23, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மது போதையில் பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலை காக்கையாந்தோப்பு அருகே வாலிபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்து வருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார், அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அரியாங்குப்பம், மணவெளி பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார், 25, என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.