ADDED : ஏப் 10, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையத்தில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில உள்ள ஒண்டி அய்யனாரப்பன் கோவில் அருகில் 60 வயது மதிக்க தக்க முதியவர் நேற்று மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
