ADDED : ஆக 28, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
பாகூர்: புதுச்சேரி – கடலுார் சாலை, முள்ளோடை நுழைவு வாயில் பூங்காவில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா தலைமையிலான போலீசார் மற்றும் தடய ஆய்வக நிபுணருடன் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்ததில், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
