ADDED : ஜூலை 14, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 65;, இவர் கடந்த 7 ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கினார். உடன் அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று கடந்த 10 ம் தேதி மதியம் வீட்டிற்கு வந்தார். பின் மாலை அரிகிருஷ்ணன் அங்குள்ள சாராயக்கடையில் மது குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.