ADDED : மே 24, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வெளியில் சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்தார்.
வேல்ராம்பட்டு, துலுக்கானத்தம்மன் நகரை சேந்தவர் சவரியப்பன் மகன் பிரான்சிஸ், 17.
இவர், அரசு கலைக் கல்லுாரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.