sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமியிடம் பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு தலா 3 ஆண்டு சிறை

/

சிறுமியிடம் பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு தலா 3 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு தலா 3 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு தலா 3 ஆண்டு சிறை


ADDED : பிப் 15, 2024 06:49 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரியில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தந்தை, மகனுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்,58; ஓட்டல் உரிமையாளர். இவரது மகன் ரக் ஷன், 22; பொறியாளர். இவர்களுக்கும், கோரிமேட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொழில் ரீதியாக முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2020ம் ஆண்டு செப்., மாதம் வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோர் கோரிமேட்டில் முன்விரோதம் உள்ள நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அவரது 15 வயது மகள் வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

அச்சிறுமியிடம், அவரது தந்தை குறித்து கேட்டனர். அவர் தந்தை வீட்டில் இல்லை என கூறியதை பொருட்படுத்தாமல் தேடினர். தந்தை இல்லாததால், சிறுமியை தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

புகாரின் பேரில் வெங்கலாசலம், ரக் ஷன் ஆகியோரை கைது செய்த கோரிமேடு போலீசார், அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சோபனாதேவி, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடாசலம், ரக் ஷன் இருவருக்கும் போக்சோ சட்ட பிரிவு 8 கீழ், தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அத்துமீறி வீட்டில் நுழைந்த குற்றத்திற்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us