/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம்
ADDED : மார் 14, 2024 06:15 AM
புதுச்சேரி : புதுச்சேரி சிகரம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
புதுச்சேரி சிகரம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் மணிவண்ணன், துணை செயலாளர் லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் சிவபாலன், குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ. ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டங்களுக்கான கோப்புகளை உடனே கவர்னர் கையெழுத்திட வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

