ADDED : ஜூலை 09, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தலைவலியால் அவதியடைந்த பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் கோபால் நகரை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சோபா, 44; அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவர் , இரவில் துாக்க மாத்திரை உட்கொண்டு வந்தார்.இதனால் மன உளச்சலில் இருந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்த போது, வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றிய நிலையில் தற்போது துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
