sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : செப் 10, 2025 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2025 08:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று லல்லி தொலாந்தல் வீதி, செஞ்சி சாலை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த வாலிபர், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டி பிடித்து போலீசார், பைக்கை சோதனை செய்தனர்.

அதில், பெட்ரோல் டேங்க் கவரில் 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், கருவடிக்குப்பம், நரிகுறவர் காலனியை சேர்ந்த சங்கர் மகன் மருதுபாண்டி, 23; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மருதுபாண்டியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us