நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று மாலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 7:00 மணிக்கு கரகம் எடுத்து வந்து, காப்பு கட்டி கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சன்னதி புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி, 10ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.

