ADDED : செப் 14, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: ரயிலிலில் கடத்தி செல்ல முயன்ற மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து, கலால்துறையினர் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனில் நின்ற புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு பெட்டியில், பயணிகள் சீட் கீழே பை ஒன்று இருந்தை போலீசார் கண்டறிந்து சோதனை செய்தனர். அதில், பல்வேறு வகையான பதுபான பாட்டிகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல், கலால்துறையினர் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
