/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆவணம் கொடுத்து ரூ.1.47 கோடி மோசடி: ஹோட்டல் உரிமையாளர் கைது
/
போலி ஆவணம் கொடுத்து ரூ.1.47 கோடி மோசடி: ஹோட்டல் உரிமையாளர் கைது
போலி ஆவணம் கொடுத்து ரூ.1.47 கோடி மோசடி: ஹோட்டல் உரிமையாளர் கைது
போலி ஆவணம் கொடுத்து ரூ.1.47 கோடி மோசடி: ஹோட்டல் உரிமையாளர் கைது
ADDED : ஜன 05, 2025 05:26 AM

அரியாங்குப்பம் : போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.1.47 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் காந்திஜி நகரைச் சேர்ந்தவர் ரவிசேகர்,63; இவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் 'மதுரை வீடு' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இவர், ஹோட்டல் விரிவாக்கத்திற்காக, கடலுாரில் உள்ள ஒரு இடத்தின் ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரி கேண்டீன் வீதியை சேர்ந்த பைனான்சியர் சங்கர்,50; என்பவரிடம் ரூ.1.47 கோடி கடன் பெற்றார்.
அந்த ஆவணங்களை சங்கர் ஆய்வு செய்தபோது, அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
போலி ஆவணங்களை கொடுத்து பணம் மோசடி செய்த, ரவிசேகர், அவரது மனைவி ஜெயசக்தி, மகன் அரவிந்தன் ஆகியோர் மீது சங்கர், புதுச்சேரி கோர்ட்டில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரியாங்குப்பம் போலீசார் கடந்த 16ம் தேதி வழக்கு பதிந்து, ரவிசேகர் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவிசேகரை நேற்று முன்தினம், போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

