ADDED : ஜூலை 09, 2025 08:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்தார்.
குருமாம்பேட், தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்தவர் மஞ்சினி, 65. இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.