sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: தமிழக முதல்வருக்கு ஆதவ் சவால்

/

 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: தமிழக முதல்வருக்கு ஆதவ் சவால்

 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: தமிழக முதல்வருக்கு ஆதவ் சவால்

 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: தமிழக முதல்வருக்கு ஆதவ் சவால்


ADDED : டிச 10, 2025 09:34 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:

புதுச்சேரி போலீஸ், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது. புதுச்சேரி முதல்வருக்கு நன்றி. இப்படியான மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எந்த இடத்திலும் கொடுத்தது இல்லை. தமிழக முதல்வரே 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள். எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா? தவெக பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் தொடங்கிவிட்டது.

த.வெ.க., தலைவர் விஜய், புதுச்சேரிக்கு ஏன் வருகிறார் என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள், நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்காக ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் நல்லது செய்ய வேண்டும் என விரும்பினார்.

அதேபோலத்தான் விஜயும், தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் புதுச்சேரிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என யோசனை வைத்துள்ளார். விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் பிரசார கூட்டத்தை நடத்துவோம்.

புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலை வாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970ல் உருவானது போல், புதுச்சேரியிலும் நல்ல முதல்வரை விஜய் உருவாக்குவார்.






      Dinamalar
      Follow us