sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாங்க் ஆப் பரோடாவின் 8,218வது கிளை சூளகிரியில் துவக்கம்

/

பாங்க் ஆப் பரோடாவின் 8,218வது கிளை சூளகிரியில் துவக்கம்

பாங்க் ஆப் பரோடாவின் 8,218வது கிளை சூளகிரியில் துவக்கம்

பாங்க் ஆப் பரோடாவின் 8,218வது கிளை சூளகிரியில் துவக்கம்


ADDED : பிப் 16, 2024 07:24 AM

Google News

ADDED : பிப் 16, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பாங்க் ஆப் பரோடா வின் புதிய கிளை, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் நேற்று துவக்கியது.

இந்தியாவின் முன்னோடி வங்கியான, பாங்க் ஆப் பரோடா, நகரம் மட்டுமின்றி, கிராமங்களிலும் தனது கிளைகளை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது.

மேலும், சுய உதவிக்குழுக்களுக்கு, கடனுதவியை வழங்கி, தொழில் அபிவிருத்திக்கு கை கொடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிராந்தியம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில், 8,218 வது, கிளையை நேற்று துவக்கியது.

இந்த கிளையை, ஐ.வி.டி.பி., நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் துவக்கி வைத்து, சிறப்புரை நிகழ்த்தினார்.

பாங்க் ஆப் பரோடா வங்கியின் சிறப்புகள், சேமிப்பு மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சுய உதவிக்குழு மகளிர் எழுப்பிய, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

விழாவில், ரூ.13.59 கோடிக்கான சுய உதவிக் குழு கடன் வழங்கப்பட்டன. கடனுதவி பெற்றவர்கள், வங்கி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதில், வங்கி சென்னை மண்டல தலைவர் சரவணகுமார், புதுச்சேரி பிராந்திய தலைவர் கமலக்கண்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us