ADDED : மே 30, 2026 03:47 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: வருமான வரித்துறை ஆய்வாளர் கோவிந்தனுக்கு நேற்று பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
வருமான வரித்துறையில் 29 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளர் கோவிந்தனுக்கு தனியார் ஓட்டலில் நேற்று பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி வருமான வரித்துறை துணை ஆணையர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
கூடுதல் ஆணையர் செல்வி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ஆய்வாளர் கோவிந்தனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
