/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : பிப் 06, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : புதுச்சேரி குடிசை மாற்று வாரியம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
திருக்கனுாரில்நடந்த விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 65 பயனாளிகளுக்கு, முதல் தவணையாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் 78 லட்சத்திற்கான பணி ஆணைகளை வழங்கினார்.பா.ஜ., பிரமுகர் முத்தழகன், நிர்வாகிகள் தமிழ்மணி, ஜெயக்குமார், செல்வகுமார், லோகு மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

