sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குழந்தை இல்லாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

/

 குழந்தை இல்லாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

 குழந்தை இல்லாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

 குழந்தை இல்லாத ஏக்கம் டிரைவர் தற்கொலை


ADDED : ஜன 10, 2026 05:01 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியிடம் தகராறு செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முத்திரையர்பாளையம், காந்தி, திருநல்லுார் மேற்கு வீதியை சேர்ந்தவர் செல்வகுமார், 31; டிரைவர். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லை. இதனால் செல்வகுமார் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இதற்கிடையே சரியான வருமானம் இல்லாததால் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, மனமுடைந்த செல்வகுமார் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். தீக்காயமடைந்த அவர், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us