/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா
/
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா
ADDED : பிப் 15, 2026 06:39 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று (15ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று (15ம் தேதி) மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, முதல் கால பூஜை, இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடக்கிறது.
மகா சிவராத்திரி விழாவிற்கு, அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், இன்று (15ம் தேதி) மாலை 4:00 மணிக்குள், தேவஸ்தானத்தில் கொடுக்கலாம் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், மாலை 6:00 முதல் நாளை காலை 6:00 மணி வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.
ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள், தேவஸ்தான குருக்கள் தேவசேனாதிபதி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

