/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவாள மாமுனிகள் திருநட்சத்திர உற்சவம்
/
மணவாள மாமுனிகள் திருநட்சத்திர உற்சவம்
ADDED : அக் 19, 2025 11:59 PM

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 655ம் ஆண்டு திருநட்சத்திர மகா உற்சவம் நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மணவாள மாமுனிகள் 655வது ஆண்டு திருநட்சத்திர மகா உற்சவம் நேற்று முன்தினம்(18 ம் தேதி) துவங்கி வரும் 28 ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி, நேற்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு, சேவை சாற்றுமுறை நடந்தது. இதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக, வரும் 28 ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.