ADDED : பிப் 28, 2026 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொத்தபுரிநத்தம், அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகி தலைமை தாங்கினார். தற்காப்பு கலை பயிற்சியாளர் ரவிச்சந்திரன், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். முகாமில் பங்கேற்று சிறப்பான பயிற்சியை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
50க்கும் மேற்பட்ட மாணவிகள், தற்காப்பு கலை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர் தாமரைச்செல்வி, ஓவிய ஆசிரியர் பச்சையப்பன், உடற்கல்வி ஆசிரியர் ரகுராமன் செய்திருந்தனர்.

