ADDED : ஜூலை 21, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் கிராமத்தில் நுாலகம் அமைக்கும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை சி.எஸ்.ஆர்., நிதி மூலம் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நுாலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணியினை அமைச்சர் ராஜவேலு, ஆறுமுகம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், கம்பெனி நிர்வாகிகள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
