ADDED : ஜூலை 19, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மொபைல் போன் பார்த்ததை, தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஜோதி மகள் பிரித்தியங்கா, 18. இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2, முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் அடிக்கடி மொபைல் போனை பார்த்தை அவரது தாய் கண்டித்தார்.அதனால், மனமுடைந்த பிரித்தியங்கா, கடந்த 9ம் தேதி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உறவினர் தேவநாதன் புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.