/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டை நபரிடம் ரூ. 33.13 லட்சம் மோசடி
/
முதலியார்பேட்டை நபரிடம் ரூ. 33.13 லட்சம் மோசடி
ADDED : ஜன 23, 2026 05:06 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டையை சேர்ந்தவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 33 லட்சத்து 13 ஆயிரத்து 999 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை.
இதேபோல், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பெண் 11 ஆயிரத்து 250, வில்லியனுாரை சேர்ந்தவர் 12 ஆயிரத்து 500 என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 33 லட்சத்து 37 ஆயிரத்து 749 இழந்துள்ளனர்.
இதுகுறித்து புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

